கொல்கத்தா, ஆக.24- கொல்கத்தாவில் பயிற்சி மருத்து வர் பாலியல் வன்கொடுமை செய்யப் பட்டு கொல்லப்பட்ட வழக்கு தொடர் பாக சிபிஐ அதிகாரிகள் அளித்த பதில் கள் திருப்தி அளிக்கவில்லை என்று அவர்களைச் சந்தித்த ஆர்.ஜி. கர் பயிற்சி மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணையின் நிலை மற்றும் அது எப்போது முடியும் என்பது குறித்து அறிந்து கொண்டு, அதற்கேற்ப தங்களது அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்ய திட்டமிட்ட ஆர்.ஜி. கர் மருத்துவமனை யின் பயிற்சி மருத்துவர்கள் குழு, கொல்கத்தாவில் சிபிஐ அதிகாரிகளை அவர்களது அலுவலகத்தில் வெள்ளி யன்று சந்தித்தது.
இந்தச் சந்திப்பு குறித்து, சனிக்கிழ மையன்று கருத்து தெரிவித்துள்ள பயிற்சி மருத்துவர்களில் ஒருவரான டாக்டர் கிஞ்சல், “சி.ஜி.ஓ. வளாகத்தில் வெள்ளியன்று சி.பி.ஐ. அதிகாரிகளை ஐந்து பேர் கொண்ட பயிற்சி மருத்து வர்கள் சந்தித்தோம். அங்கிருந்தும் திருப்திகரமான பதில் கிடைக்க வில்லை. எங்களின் ஒரே கோரிக்கை என்பது நியாயமே. எங்களின் தொடர் போராட்டத்தின் பின்னணியில் உள்ள நோக்கம் நியாயம் கிடைக்க வேண்டும் என்பதுதான் என்று சி.பி.ஐ.யிடம் கூறினோம். நீங்கள்தான் விசாரணை நடத்துகிறீர்கள் என்பதால் அனைத் தும் உங்கள் கைகளில்தான் உள்ளது என தெரிவித்தோம்.
இந்தக் குற்றத்தில் தொடர்புடை யவர்கள் குறித்து நீங்கள் எங்களுக்கு விரைவாக தெரிவிக்க வேண்டும். அப்போதுதான், நாங்கள் எங்களின் போராட்டத்தின் திசை குறித்து முடி வெடுக்க முடியும் என கூறினோம். ஆனால் அவர்கள், நீங்கள் எங்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று கூறினார்கள்” என்று தெரிவித் துள்ளார்.